ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பயணி...கன நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே படை வீரர்கள்!!
மும்பை: மும்பை புறநகரில் இருக்கும் கல்யாண் ரயில் நிலையத்தில் நேற்று ரயிலுக்குள் தவறி விழவிருந்த பயணி ஒருவரை அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காப்பாற்றி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகரில் உள்ளது கல்யாண் ரயில் நிலையம். எப்போதும் நெருக்கடி மிகுந்து காணப்படும். வெளிமாநிலங்களில் குறிப்பாக தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து செல்லும் ரயில்களும் இந்த மார்க்கத்தில்தான் செல்ல வேண்டும்.
இங்கு நேற்று ரயில்வே பாதுகாப்புப் படையச் சேர்ந்த வீரர்கள் கே. சாகு மற்றும் சோம்நாத் மகாஜன் இருவரும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அப்போது அங்கு பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓடும் ரயிலில் 52 வயது பயணி ஒருவர் ஏறுவதற்கு முயற்சித்தார். தடுமாறி ரயிலுக்கும், பிளாட்பாரம் இடையே விழச் சென்றார். அப்போது அங்கு இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த சாகு மற்றும் சோம்நாத் மகாஜன் இருவரும் பாய்ந்து சென்று அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல.. எப்படி வாழ்கிறோம்!
இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பயணியை கன நேரத்தில் சுதாரித்து காப்பாற்றிய சாகு, சோம்நாத் மகாஜன் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
#WATCH On duty Railway Protection Force personnel K Sahu and Maharashtra Security Force personnel Somnath Mahajan at Kalyan railway station saved the life of a 52-year old passenger, who slipped between the platform and track as he de-boarded from a moving a train yesterday. pic.twitter.com/rmd0OuMzEy
— ANI (@ANI) July 29, 2020