ஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள்
மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை மலாடு பகுதியில் ஒரு சொகுசு பங்களாவில் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ஆபாச படம் எடுத்து கொண்டிருந்த யாஸ்மின் ரோவா உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகை வந்தனா திவாரியும் கைது செய்யப்பட்டார்.
இந்த கும்பல் சினிமா பட வாய்ப்புகளை தேடி அலையும் மாடல்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படங்களில் நடிக்க வைத்தது விசாரணையில் அம்பலமானது.
ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு முதல் முறை.. வீதிக்கு வரும் அதிமுக.. 28ம் தேதி மாநிலம் முழுக்க போராட்டம்
ஆபாச படம்
இந்த ஆபாச படம் தயாரிப்பில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆடிஷனுக்கே ஆடையின்றி நிர்வாணமாக நிற்க சொன்னார் குந்த்ரா என நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திடுக் தகவல்கள்
இந்த நிலையில் ராஜ் குந்த்ரா குறித்து பல திடுக் தகவல்கள் கிடைத்தன. அதில் ஆபாச படங்கள் தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். லாக்வுடன் நேரத்தில் அவருடைய தொழில் சூடு பிடித்திருக்கிறது. ஆபாச படங்களை மொபைல் செயலியில் ரிலீஸ் செய்ததன் மூலம் ஆரம்ப நாட்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்தது.
8 லட்சம்
அதன் பின்னர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரையிலும் ராஜ்குந்த்ரா சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆபாச படங்களை இது போன்று செயலியில் இந்தியாவிலிருந்து அப்லோடு செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்திருக்கிறார்கள்.
வீடியோ
இந்தியாவிலிருந்து வீ டிரான்ஸ்பர் வாயிலாக லண்டனுக்கு இத்தகைய வீடியோக்களை அனுப்பியுள்ளனர். ஹாட்ஷாட் என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைத்திருக்கிறது.