ஃபுல்லா குடித்துவிட்டு பத்திரிகையாளர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய சஞ்சய் தத்- வைரல் வீடியோ!
மும்பை: மும்பையில் நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டியில் ஃபுல் போதையில் இருந்த சஞ்சய் தத், பத்திரிகையாளர்களை தரக்குறைவைக பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த விவகாரத்தில் சிறை தண்டனையை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டார். எனினும் அவரது தண்டனை காலம் முடியவில்லை.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது வீட்டில் நண்பர்களுக்கு சஞ்சய் தத்தும் அவரது மனைவி மான்யதா தத்தும் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது அவரது வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் கூடினர்.
A heavily drunk Sanjay Dutt uses the worst of words for photographers at his Diwali party - *for doing their job*. Disgusting. pic.twitter.com/UnCRcCc0CB
— Ananya Bhattacharya (@ananya116) November 10, 2018
அப்போது ஃபுல் போதையில் இருந்த சஞ்சய் தத், போட்டோ எடுக்க வந்த பத்திரிகையாளர்களிடம் தகராறு செய்தார். பின்னர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடாமல் இங்கு ஏன் வந்தீர்கள் என சஞ்சய் கேட்டதற்கு பத்திரிகையாளர் ஒருவர் இது தங்களது பணி, தங்களது பொறுப்பாளர் கூறியதன்பேரில் இங்கு வந்தோம் என தெரிவித்தார்.
இதனால் மேலும் கடுப்படைந்த சஞ்சய் தத், மிகவும் மோசமான ஆபாசமான வார்த்தைகளால் அவர்களை திட்டினார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் சஞ்சய் தத்தை திட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.