ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் கோஷ்யாரி இன்று பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் இன்று இரவு 8.30 மணி வரை ஆளுநர் காத்திருந்திருக்க வேண்டும்.
Imposition of President Rule in Maharashtra was decided long ago.But Hon Governer should have waited till 8.30 tonight before sending report to Centre. Bcoz he only had fixed this deadline with NCP as last option to form govt.
— Sanjay Nirupam (@sanjaynirupam) November 12, 2019
Prima facie it looks illegal & unconstitutional now.
ஏனெனில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணிவரை அவகாசம் கொடுத்தது அவர்தானே.. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியிருப்பது சட்டவிரோதம்; அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
இவ்வாறு சஞ்சய் நிருபம் சாடியுள்ளார்.