சேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது; உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே கற்ற பாடத்தை மறக்கவும் கூடாது என காங்கிரஸ் மேலிடத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி இணைந்து கூட்டணி அரசு அமைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான டெல்லி பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து நாளை முதல் மும்பையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. ஓரிரு நாட்களில் இம்மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைக்கும் என கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணிக்கு தொடக்கம் முதலே மூத்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கடுமையாக எதிர்த்து வருகிறார். சிவசேனாவின் மூத்த தலைவராக இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்தர் சஞ்சய் நிருபம்.
சிறுமிகள் கடத்தல்:சுவாமி நித்தியானந்தா மீது குஜராத்தில் வழக்குப் பதிவு- ஆசிரம நிலத்திலும் சர்ச்சை
சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸுக்கு பேரழிவுதான் என ஏற்கனவே எச்சரித்திருந்தார் சஞ்சய் நிருபம். இன்றும் மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் நிருபம் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்தது காங்கிரஸ். அப்போது ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இன்னமும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் மீண்டு வர முடியவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் இங்கேயும் அதேபோன்ற ஒரு நிலைதான் வரும். உத்தரப்பிரதேசம் கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் தொடர்ச்சியாக இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன். இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார்.