நிர்மலா சீதாராமனின் ஒரே பேட்டி.. ஓஹோவென்று உயர்ந்த பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் தாறுமாறு
Recommended Video
மும்பை: தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் இன்று விறுவிறுவென உயர்ந்து அசத்தின.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து சில வரி சலுகை நடவடிக்கைகளை அறிவித்தார். இதைஅடுத்து, பங்குச் சந்தைகள் 3 சதவீதத்திற்கு மேல் கிடுகிடுவென ஏற்றம் கண்டன.
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை விதிவிலக்கு இல்லாமல் 22 சதவீதமாகக் குறைப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தது இதற்கு ஒரு முக்கய காரணமாக சொல்லப்படுகிறது.
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 37,380 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 235 புள்ளிகள் அல்லது 2.20 சதவீதம் அதிகரித்து 10,940.30 ஆகவும் உள்ளது.
அரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு
ஜிஎம்ஆர் உள்கட்டமைப்பு (2.83 சதவீதம் வரை), ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு 5.11% (2.50 சதவீதம் வரை), சீமென்ஸ்என்எஸ்இ 4.03% (2.40 சதவீதம் வரை) மற்றும் அதானி பவர் (2.34 சதவீதம் வரை) உயர்ந்தன.
ஏபிபி இந்தியா (1.68 சதவீதம் வரை), பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (1.37 சதவீதம் வரை), ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி (1.09 சதவீதம் வரை) மற்றும் டாடா பவர் கம்பெனி (0.77 சதவீதம் உயர்ந்து) அதிகரித்து காணப்பட்டன.