பட்ஜெட் மீது பயங்கர எதிர்பார்ப்பு.. பங்குச் சந்தையில் தாறுமாறு ஏற்றம்
மும்பை: மத்திய அரசு நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் இன்று விறுவிறு ஏற்றம் கண்டது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
விவசாயம், மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், இன்று பங்குச் சந்தையில் நல்ல எழுச்சி காணப்பட்டது.
சென்செக்ஸ் 601.21 புள்ளிகள் உயர்ந்து 36,192.46 புள்ளிகளாக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 161.75 புள்ளிகள் உயர்ந்து, 10,813.55 புள்ளிகளை கடந்தது. ஹெச்டிஎப்சி, கோட்டக் மகிந்திரா வங்கிகள், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இன்ஃபோசிஸ் போன்றவற்றின் பங்குகள் ஏற்றம் கண்டதுதான் ஒட்டுமொத்த பங்குச் சந்தை உயர்விற்கு காரணமாகும்.