கதவுகள் திறந்தன... காஷ்மீரில் விரைவில் ரிலையன்ஸ் முதலீடுகள் கொட்டும்: முகேஷ் அம்பானி
மும்பை: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏராளமான முதலீடுகளை செய்ய உள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ஆகஸ்ட் 6-ந் தேதி நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இன்று ரிலையன்ஸ் குழுமங்களின் ஆண்டு கூட்டத்தில் இன்று பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி காஷ்மீர் தொடர்பாக வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ரிலையன்ஸ் குழும்ம் முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
RIL Chairman and Managing Director, Mukesh Ambani: Responding to the call of PM Narendra Modi Ji, we stand committed to the needs of the people of Jammu and Kashmir and Ladakh. You will see several announcements for the Jammu and Kashmir and Ladakh in the coming days. pic.twitter.com/hewKDYb9FM
— ANI (@ANI) August 12, 2019
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் ரிலையன்ஸ் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து வரும் நாட்களிலான அறிவிப்புகள் மூலம் நீங்கள் பார்க்கலாம்.
இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.