எனக்கு கேபினட் அமைச்சர் இல்லையா? ராஜினாமா செய்தார் சிவசேனாவின் அமைச்சர் அப்துல் சத்தார்?
மும்பை: தமக்கு கேபினட் அமைச்சர் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு சிவசேனாவின் அமைச்சர் அப்துல் சத்தார் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் 3 கட்சிகளிலுமே அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில்தான் தமக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து சிவசேனாவின் அப்துல் சத்தார் துணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, முத்தலாக், என்.ஐ.ஏ. கைவிட நாம் தமிழர் கட்சி பொதுக்குழு வலியுறுத்தல்
இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் அனில் தேசாய், அப்துல் சத்தார் ராஜினாமா செய்யவில்லை. அவரை சமாதானப்படுத்த மூத்த தலைவர் அர்ஜூன் கோட்காரை கட்சி மேலிடம் அனுப்பி வைத்தது. இருவரும் இன்று காலை அவுரங்கபாத்தில் ஹோட்டல் ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றார்.