சட்டவிரோதமாக குடியேறிய பாக்., வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்..... சிவசேனா திட்டவட்டம்
மும்பை: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் பாஜக அணியில் சிவசேனாவுக்கு பதிலாக ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா இணைகிறது. மேலும் இந்துத்துவா கொள்கையை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக ராஜ்தாக்கரே தமது கட்சியின் கொடியில் மாற்றங்களையும் செய்துள்ளார்.
சீனா, அமெரிக்காவில் வாட்ஸ் அப் முறை கிடையாது.. இந்தியாவிலும் ஒழிக்க வேண்டும்.. கே எஸ் அழகிரி
கட்சி கொடியை காவி நிறத்திலும் அதில் சத்ரபதி சிவாஜியின் முத்திர வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேச நாடுகளின் முஸ்லிம்களை வெளியேற்ற கோரி பிப்ரவரி 9-ல் போராட்டம் நடத்தப் போவதாகவும் ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
ஆனால் ராஜ்தாக்கரே தமது கட்சியின் கொடியை மாற்றியதுதான் விசித்திரமாக உள்ளது. சிவசேனா எப்போதும் கட்சி கொடியை மாற்றியது கிடையாது. எப்போதும் சிவசேனாவுக்கு காவி கொடிதான்.. இந்துத்துவா கொள்கைக்காக எப்போதும் சிவசேனா போராடும். குடியுரிமை சட்ட திருத்தத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன.
இதே குடியுரிமை சட்ட திருத்தத்தை மக்களை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே அமித்ஷா பயன்படுத்துகிறார் என ராஜ்தாக்கரே கூறியிருந்தார். இப்போது அதே குடியுரிமை சட்ட திருத்தத்தை ராஜ்தாக்கரே ஆதரிக்கிறார். இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.