அடுத்தடுத்த என்கவுண்டர்.. அனைவரும் விடுதலை.. சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கு கடந்த பாதை
மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
2005- நவம்பர் 22: சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி ஆகியோர், ஹைதராபாத்திலிருந்து பஸ்சில் சென்றபோது மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி பகுதியில் வைத்து குஜராத் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டனர்.
நவம்பர் 26: சொராபுதீன் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார்.
நவம்பர் 28: கவுசர் பீ, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.
2006, டிசம்பர் 28: துளசிராம் பிரஜாபதி, சப்ரி கிராமம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார்.
2010 ஜனவரி: என்கவுண்டர் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது, உச்ச நீதிமன்றம்.
ஜூலை 23: சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
ஜூலை 25: அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது
அக்டோபர் 29: அமித்ஷாவிற்கு குஜராத் ஹைகோர்ட் ஜாமீன் வழங்கியது
2012, செப்டம்பர் 27: குஜராத்திலிருந்து மும்பைக்கு, வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
2014, டிசம்பர் 30: அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம்.
2016, ஆகஸ்ட் 1: அமித்ஷாவை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2018, டிச. 3: சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா முன்னிலையில், இறுதி வாதங்கள் துவங்கின.
டிச. 7: விசாரணை முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
டிசம்பர் 21: குற்றச்சாட்டுக்கு ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு.