மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஷாந்த் கடைசியாக செய்த 2 போன் கால்.. தற்கொலைக்கு முன் பாலிவுட் நடிகரிடம் நீண்ட நேரம் பேச்சு.. யார்?

நடிகர் சுஷாந்த் சிங் தனது தற்கொலைக்கு முன் பாலிவுட் நடிகர் ஒருவரிடம் நீண்ட நேரம் போனில் பேசி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தனது தற்கொலைக்கு முன் பாலிவுட் நடிகர் ஒருவரிடம் நீண்ட நேரம் போனில் பேசி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Sushant Singh Last Phone Call அந்த 2 நபர்..என்ன பேசினார்?

    நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம் வருவார் என்று கணிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது மும்பை வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     தற்கொலை கடிதம் இல்லை.. வேறு முக்கிய காரணம் இருக்கலாம்.. சுஷாந்த் சிங் மரணம்.. போலீசின் புதிய கோணம்! தற்கொலை கடிதம் இல்லை.. வேறு முக்கிய காரணம் இருக்கலாம்.. சுஷாந்த் சிங் மரணம்.. போலீசின் புதிய கோணம்!

    சுஷாந்த் தற்கொலை

    சுஷாந்த் தற்கொலை

    இந்த நிலையில் சுஷாந்த் சிங் தான் தற்கொலை செய்வதற்கு முன் இரண்டு பேரிடம் போனில் பேசி இருக்கிறார். காலை 10 மணிக்கு பின்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 10 - 12 மணிக்குள் அவர் தற்கொலை செய்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

    போன் கால்

    போன் கால்

    இந்த நிலையில் அவர் 10 மணிக்கு பிறகு தனது சகோதரியுடன் போனில் பேசி இருக்கிறார். இவர் சுமார் 20 நிமிடம் தனது சகோதரியுடன் போனில் பேசி உள்ளார் . அதன்பின் பாலிவுட் நடிகர் ஒருவரிடம் போனில் பேசி இருக்கிறார். இவரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. டீவி சீரியல்கள் மற்றும் சில பாலிவுட் படங்களில் நடித்த மகேஷ் ஷெட்டிதான் அந்த நபர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    யார் இவர்?

    யார் இவர்?

    மகேஷ் ஷெட்டி சுஷாந்த் சிங்கின் மிகவும் நெருக்கமான நண்பர் ஆவார். இவர்கள் நீண்ட வருடங்களாக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஷாந்த் சிங் மகேஷை தனது உடன் பிறவாத சகோதரர் போல நடத்தி இருக்கிறார். டிவி நிகழ்ச்சியில் இருந்த போதே இவர்கள் இருவரும் நண்பர்கள். சுஷாந்த் சிங்கின் முதல் டிவி நிகழ்ச்சியான கிஸ் தேஷ் மெயின் ஹோகா மேரே தில் நிகழ்ச்சியில் மகேஷும் இருந்துள்ளார்.

    காரணம்

    காரணம்

    சுஷாந்த் சிங்கிற்கு சினிமா வாய்ப்பு கிடைக்க முக்கியமான காரணங்களில் மகேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் உடன் பல இடங்களுக்கு சுஷாந்த் சிங் வெளியே சென்று இருக்கிறார். இவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பது பாலிவுட் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். கடந்த மே மாதம் கூட மகேஷ் பிறந்த நாளுக்கு சுஷாந்த் சிங் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    நீண்ட நேரம் பேசினார்

    நீண்ட நேரம் பேசினார்

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நீண்ட நேரம் நேற்று போனில் பேசி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர். மகேஷை இன்று சந்தித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இது தொடர்பாக முக்கிய விஷயங்கள் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sushant Singh Rajput calls two people before his suicide says police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X