தாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி?
மும்பை: மகாராஷ்டிராவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தாராவியில் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியானார். இதனையடுத்து 2,000 குடியிருப்புகளை 9 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
மும்பை தாராவியில் 56 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். அவரது குடியிருப்பில் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 10 பேர் தங்கி இருந்தது தெரியவந்தது.
அவர்கள் மூலமாகவே முதியவருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேநேரத்தில் மரணடைந்த முதியவருக்கு பலிகா நகர் பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. இந்த வீட்டில் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.
மேலும் டெல்லி சென்று திரும்பியவர்கள் கேரளாவுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதியவர்தான் செய்தும் கொடுத்திருக்கிறார். இதனால் யார் மூலமாக முதியவருக்கு கொரோனா பரவி இருக்கும்? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை
Recommended Video
இதனிடையே தாராவியில் 2,000 குடியிருப்புகளுடனான 9 மாடி கட்டிடம் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு தனிமைப்ப்டுத்தப்பட்டிருக்கின்றனர். தற்போது அப்பகுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.