மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா: பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 7 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 2 மணிக்கு இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் என்றாலும் 10 குழந்தைகள் உயிரோடு கருகினர்.

Ten children died in a fire accident Bhandara District General Hospital

தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Ten children died in a fire that broke out at Sick Newborn Care Unit (SNCU) of Bhandara District General Hospital at 2 am today. Seven children were rescued from the unit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X