போதைப் பொருள் வழக்கு: டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் அதிரடி கைது
மும்பை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கு விசாரணையில் சினிமா நட்சத்திரங்களுக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்குமான தொடர்புகள் வெட்ட வெளிச்சமாகின. ரேகா சக்ரோபர்த்தி தொடங்கி அடுத்தடுத்து கைதுகள் தொடருகின்றன.
தொடக்கத்தில் விசாரித்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இப்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கில் தீபிகா படுகோனே, சார அலிகான் உள்ளிட்டோர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்
இதனிடையே போதைப் பொருள் வாங்க முயற்சித்ததாக டிவி நடிகை ப்ரீத்திகா சவுகானும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.