ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்
Recommended Video
மும்பை: டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் நேற்று இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க அமெரிக்க தமிழர்கள்.. அரசு நடவடிக்கை.. அமைச்சர்
கோழைகள்
இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில் நாட்டில் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணருகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்து கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள்.
பொறுத்துக் கொள்ள மாட்டோம்
அவர்கள் யார் என்பது குறித்து வெளிக் கொணர வேண்டும். மகாராஷ்டிராவில் மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மாணவர்களை தாக்கும் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
தீவிரவாத தாக்குதல்
மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலை நினைவுப்படுத்துகிறது என்றார் உத்தவ் தாக்கரே.
ஒப்பீடு
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 164 பேர் பலியாகிவிட்டனர். 308 பேர் படுகாயமடைந்தனர். இந்த கண்மூடித்தனமான தாக்குதலை மாணவர்கள் மீதான தாக்குதலோடு உத்தவ் தாக்கரே ஒப்பிட்டு கூறியுள்ளார்.