அடடா.. அஜீத் பவார் நிலைமை இப்படி ஆயிருச்சே.. செம கலாய்.. செம கலாய்!
அஜித்பவாரின் தற்போதைய நிலை குறித்து வீடியோ ஒன்று வைரலாகிறது
Recommended Video
மும்பை: அஜீத் பவார் நிலைமை இப்ப எப்படி இருக்கு தெரியுமா.. இப்படி சொல்லி அவரை டிவிட்டரில் சரமாரியாக கலாய்த்து தள்ளி கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் கூத்துக்கள் உலகம் முழுவதும் பார்க்கும் நிலைக்குப் போய் விட்டது. அதிரடியாக பாஜக முதல்வர் பட்னவீஸ் பதவியேற்றது, கூடவே அஜீத் பவாரும் துணை முதல்வராகப் பதவியேற்றதை நாட்டு மக்கள் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த பதவிப்பிரமாணங்களை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதையும் ரகசியமாக நடத்தக் கூடாது. முக்கியமாக வீடியோ பிடிக்க வேண்டும் என்று கூறி விட்டது.
இந்த நிலையில் பட்டுக் கொள்ளாமல் தொட்டுக் கொள்ளாமல் ஒட்டிக் கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல பிடி கொடுக்காமல் இருந்து வந்த அஜீத் பவார் இன்று தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இதை வைத்து தற்போது அவரைக் கலாய்த்துக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த வைரல் டிவீட். ஒரு கால்வாய் ஓடுகிறது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்க கால்வாய்க்கு தாவுவதற்காக ஒரு பூனை வந்துள்ளது. ஆனால், எந்த பக்கமும் போகாமல் கால்வாய்க்கு நடுவில் தத்தளிக்கிறது.
எந்தப் பக்கம் போவது என்றே தெரியாமல் அந்த பக்கம் 2 கால், இந்த பக்கம் 2 கால் என வைத்துக் கொண்டு திணறி நிற்கிறது அந்த பூனை.. இந்த பூனையை போட்டுதான் அஜீத் பவாரை கலாய்த்துள்ளனர்.
#AjitPawar after #SupremeCourt order on #MaharashtraCrisis thru #ConstitutionofIndia on #ConstitutionDay #ThanksDrAmbedkar #26NOVEMBER #MahaThriller #TuesdayThoughts and #TuesdayMotivation pic.twitter.com/Oz9ZFQNfbz
— Nishant Varma - ReVolter (@varnishant) November 26, 2019
பேசாமல் அவர் சித்தப்பாவோடேயே இருந்திருக்கலாம்.. இப்ப கூட கெட்டுப் போகலை.. சித்தப்பா மன்னிச்சிருங்கன்னு போய் கும்பிடு போட்டா சரியாப் போச்சு!