பாஜகவுடன் அஜித்பவார் கை கோர்த்தது என்சிபியின் முடிவு அல்ல- சரத்பவார் திட்டவட்டம்
Recommended Video
மும்பை: பாஜகவுடன் அஜித்பவார் கை கோர்த்து துணை முதல்வராகி இருப்பது அவரது சொந்த முடிவு; தேசியவாத காங்கிரஸின் முடிவு அல்ல என அக்கட்சித் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் என்சிபி- காங்கிரஸ்- சிவசேனா இணைந்துதான் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்த வந்தன. இந்த ஆலோசனையின் முடிவில் சிவசேனாவை சேர்ந்த உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என சரத்பவார் கூறியிருந்தார்.
மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்; இம்மூன்று கட்சிகளின் புதிய கூட்டணி அரசு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் திடீரென என்சிபியின் அஜித் பவார் தலைமையிலான பிரிவு பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளது.
Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP).
— Sharad Pawar (@PawarSpeaks) November 23, 2019
We place on record that we do not support or endorse this decision of his.
மகாராஷ்டிரா: நள்ளிரவு வரை நல்லாதான போய்கிட்டு இருந்துச்சு... விடிகாலையில் இப்படி ஒரு படார் பல்டி
முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் இன்று காலையில் பதவியேற்றனர். இது தொடர்பாக சரத்பவார் கூறுகையில், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என அஜித்பவார் எடுத்த முடிவு தனிப்பட்டதாகும். அது என்சிபியின் முடிவு அல்ல. அஜித்பவாரின் முடிவுக்கு என்சிபி ஆதரவு தரவில்லை என்றார்.