புல்வாமாவில் இறந்தவர்களுக்காக வாக்களியுங்கள்.. மோடி பகீர் பிரச்சாரம்.. வலுக்கும் எதிர்ப்பு!
முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை புல்வாமா தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை: முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை புல்வாமா தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி தேர்தலுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. இந்த பிரச்சாரத்தில் அவர் இந்திய ராணுவம் குறித்து பேசினார்.

மோடி என்ன சொன்னார்
மோடி தனது பிரச்சாரத்தில் பாலக்கோட் தாக்குதலை பாஜக நடத்தியது. பாஜக அரசு இதை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். உலக நாடுகள் நம்மை பார்த்து ஆச்சர்யம் அடைகிறது. ஆனால் நாங்கள் இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

முதல்முறை வாக்கு
நான் ஒரு விஷயம்தான் கேட்க விரும்புகிறேன். முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை பாலக்கோட் தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள். அங்கு தாக்குதல் நடத்திய நம் படைக்காக உங்கள் வாக்குகளை அளியுங்கள். புல்வாமாவில் இறந்த நமது வீரர்களுக்காக உங்கள் வாக்குகளை சமர்ப்பணம் செய்யுங்கள்.

பாகிஸ்தான் இப்படித்தான்
பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே அப்படித்தான் இருக்கிறது. பாகிஸ்தான் என்ன நினைத்ததோ அதைத்தான் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் சமர்ப்பணம் செய்து இருக்கிறது. அந்த கட்சியையா நீங்கள் நம்புகிறீர்கள், என்று கூறியுள்ளார்.

ராணுவம்
ராணுவ வீரர்கள், ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. ஆனால் மோடி அதை துட்சமாக கூட மதிக்காமல் தனக்கு தோன்றியதை பேசி இருக்கிறார். ராணுவத்தை வாக்கு சேகரிக்க அவர் பயன்படுத்தியது தவறு என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications