வீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்!!
மும்பை: வீட்டில் இருந்து வேலை செய்ய அல்லது தொலை தூரத்தில் இருந்து வேலை செய்ய தேடுதலில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவீதம் 44 ஆக கடந்த பிப்ரவரி முதல் ஜூலை வரை அதிகரித்து இருப்பாதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கிடைத்த வேலைக்கு செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து ஐடி போன்ற நிறுவனத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலரும் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வது தற்காலிகமானதாக இருக்கும்.
ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு மவுசு அதிகரித்து வருகிறது. மேலும், ஐடி, தொழில்நுட்பத்துறைகள், சுகாதாரம், மார்க்கெட்டிங், டெலிவரி ஆகிய துறைகளில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதால், உற்பத்தி திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை நிறுவனங்கள் உறுதி செய்த பின்னர், வீட்டில் இருந்து வேலை செய்வதையும் அங்கீகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றன.
100 நாள் வேலை வாய்ப்புக்கு குறைகிறதா மவுசு... காரணம் என்ன?
வேலை தேடுபவர்களுக்கு வீட்டில் இருந்து செய்வது சவுகரியமாக இருக்கிறது என்று நம்புகின்றனர். இதனால், தற்போது பலரும் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்வு செய்து வருகின்றனர். கொரோனா போன்ற இக்கட்டான கால கட்டங்களில் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றினாலும், தொடர்ந்து வர்த்தகம் எந்த இடையூறும் இன்றி நடந்து வருகிறது. தொலைதூரத்தில் இருந்து திறன் இருந்தும் இதுநாள் வரை வாய்ப்புகள் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற வேலைகள் சாதமாக இருப்பதாகவே கருத்துக்கள் எழுந்துள்ளன.