கோலி.. சாப்பிட்டதுக்கெல்லாம் வெட்கப்படக் கூடாது.. அனுஷ்கா கர்ப்பம் குறித்து ஜொமாட்டோ கொச்சை ட்வீட்
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஜொமாட்டோ ஒரு சர்ச்சைக்குரிய.. கொச்சையான, இரட்டை அர்த்தம் கொண்ட ஒரு ட்வீட்டை போட்டு வாழ்த்துகளை கூறியுள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக கோஹ்லி அறிவித்தார்.
வரும் ஜனவரி 2021ஆம் ஆண்டு புது வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகவும் விராட் கோஹ்லி தெரிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லியின் ரசிகர்களும் அனுஷ்காவின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 மாதம் காத்திருங்க.. இந்தியாவே எதிர்பார்க்கும் தடுப்பூசி குறித்து சீரம் சிஇஒ சூப்பர் தகவல்
புகைப்படம்
இந்த ட்வீட்டும் 5 மாத கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மாவுடன் கோஹ்லி வெட்கப்பட்டபடியே நிற்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் மகிழ்ந்தனர். இருவருக்கும் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
உணவு டெலிவரி நிறுவனம்
இந்த நிலையில் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ, இருவரையும் வாழ்த்தி ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது. அதில் அனுஷ்கா சர்மா கர்ப்பமானதும் விராட் அப்பாவாக போவதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் என தெரிவித்துள்ள ஜொமாட்டோ அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு சர்ச்சைக்குரிய கொச்சையாக ஒரு வரியையும் இந்தியில் போட்டுள்ளது.
கொச்சை
அதாவது விராட் அவர்களே இனிமையான ஒன்றை சாப்பிட்டால் நீங்கள் வெட்கப்படக் கூடாது, அது உங்கள் சேவை என இரட்டை அர்த்தத்தில் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. இந்த கொச்சையான ட்வீட்டையும் பெரும்பாலான நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.
வார்த்தை விளையாட்டு
ஜொமாட்டோவின் வார்த்தை ஜாலம், வார்த்தை விளையாட்டு என கூறியுள்ளனர். இன்னும் சிலர் ஜொமாட்டோ நிறுவனத்தை அறிவாளி என்று பாராட்டியுள்ளார்கள். இந்த இரட்டை அர்த்த ட்வீட்டை நான் விரும்புகிறேன் என ஒரு வலைஞர் கருத்து தெரிவித்துள்ளார். மிகவும் புதுமையான ட்வீட் என்றும் இந்த ட்வீட்டை பதிவு செய்த ஜொமாட்டோ ஊழியருக்கு அந்த நிறுவனம் ஊதிய உயர்வை தர வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளார்கள். தாய்மையை கேலி செய்யும் விதத்தில் ட்வீட் போட்ட நபர் மீது ஜொமாட்டோ நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டுள்ளனர்.