மைசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடிகுண்டு...தீவனத்தை சாப்பிட்ட பசு வாயில் வெடித்து உயிரிழப்பு!!

Google Oneindia Tamil News

மைசூர்: மைசூரில் காட்டு பன்றிகளை கொல்வதற்காக தீவனத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை சாப்பிட்ட பசு வாயில் வெடிகுண்டு வெடித்து இறந்தது. கேரளாவில் யானை இதேபோன்று வெடிகுண்டு சாப்பிட்டதில் இறந்து சில நாட்களிலேயே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கைசூரில் கோடே பகுதியில் பெட்டதாபீடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம கவுடா. இவரது வீட்டு பசுவுக்குத்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பசுவுக்கு ஆறு வயதாகிறது.

Mysore: Cow Accidentally Eats Explosive hidden in the Fodder and died

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் பாக்கியலட்சுமி அளித்திருக்கும் பேட்டியில், ''தீவனம் சாப்பிடும்போது வெடிகுண்டு வெடித்ததில் பசுவின் வாயில் நாக்கு மற்றும் குரல்வளை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சாப்பிடும்போது வாயில் வெடிகுண்டு வெடித்தால் எந்தளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை'' என்றார்.

இறைச்சிக்காக பன்றியை கொல்வதற்கு வைக்கப்பட்டு இருந்த தீவனத்தை பசு சாப்பிட்டதால் இந்த ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பசு வாயில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு நரசிம்ம கவுடா ஓடிச் சென்று பார்த்தபோது, பசுவின் வாயில் ரத்தம் வடிந்து கொண்டுள்ளது.

இதுகுறித்து கவுடா கூறுகையில், ''புதருக்கு அருகே தீவனம் சாப்பிட சென்றபோது வெடிகுண்டு வாயில் வெடித்தது. வெடிகுண்டு வாயில் வெடித்ததில் வாய் சிதறியது. எனது உறவினர் இதுகுறித்து என்னிடம் கூறினார். நான் ஓடிச் சென்று பார்த்தேன். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

பாரி வள்ளலின் பறம்பு மலையை சிதைக்கும் கல்குவாரிகள்- போராட்டம் நடத்திய 65 பேர் கைது பாரி வள்ளலின் பறம்பு மலையை சிதைக்கும் கல்குவாரிகள்- போராட்டம் நடத்திய 65 பேர் கைது

விலங்குகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் கால்நடை மருத்துவர் அமர்தீப் சிங் சிகிச்சை அளித்தார். காயம் பெரியளவில் ஏற்பட்டு இருந்த காரணத்தினால், காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்போவதாக கவுடா தெரிவித்துள்ளார்.

கேரள யானை வாயில் வெடி வெடிப்பு:

கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் கடந்த மே மாதம் கருவுற்ற யானை ஒன்று அன்னாசி பழம் சாப்பிட்டது. அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து யானை இறந்தது. இது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்த சோகம் மனதை விட்டு நீங்குவதற்குள் இந்த சோகம் நடந்துள்ளது.

English summary
Mysore: Cow Accidentally Eats Explosive hidden in the Fodder and died
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X