மைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு!
மைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: மைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா கட்சியினரிடம் பேசினார்.
அப்போது பெண் ஒருவர் வேகமாக எழுந்து சித்தராமையாவை நோக்கி ''உங்கள் மகன் எம்எல்ஏ யாதிந்த்ராவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் தொகுதிக்கே வருவதில்லை'' என்று கோபமாக கூறினார்.
மைக் பிடுங்க சென்றார்
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. சித்தராமையா அந்த பெண்ணை அமர சொன்னார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து சித்தராமையாவை நோக்கி கோபமாக கத்தினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
துப்பட்டா போனது
இதனால் சித்தராமையா அந்த பெண்ணின் கையில் இருந்த மைக்கை பிடுங்க சென்றார். ஆனால் மைக்கிற்கு பதிலாக அவர் அந்த பெண்ணின் துப்பட்டாவை கையில் பிடித்து இழுத்து
மைசூரில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெண் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரசை சேர்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா கட்சியினரிடம் பேசினார். விட்டார். இதில் துப்பட்டா பாதி கீழே விழுந்தது.
|
வைரல் வீடியோ
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இணையத்தில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் அந்த பெண்ணின் விவரங்கள் வெளியாகவில்லை.
பாஜக கோபம்
இந்த விவகாரத்தை தற்போது பாஜக கையில் எடுத்து இருக்கிறது. சித்தராமையா செய்தது தவறு, அவர் ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தி இருக்க கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.