பொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்!
3 அடி உயர மணமக்களுக்கு நாகையில் கல்யாணம் நடந்துள்ளது
நாகை: மாப்பிள்ளையும் 3 அடி உயரம்.. கல்யாண பொண்ணும் 3 அடி உயரம்.. இருவரும் வேளாங்கண்ணி கோயிலில் கல்யாணம் செய்து கொண்டனர். இதில் மாப்பிள்ளை அஜித் தீவிர ரசிகராம்!
5வது லாக்டவுன் அமலில் இருந்தும் முற்றிலுமாக கொரோனா ஒழியவில்லை.. தொற்று பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் கூடி கொண்டே வருகிறது.
மற்றொரு புறம் பல துறைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இயல்புக்கு வர முடியாவிட்டாலும், சமூக விலகலுடன் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கல்யாணம் நடத்தினாலும் மிக குறைந்த அளவே அதாவது 50-க்கும் குறைவானோர் மட்டுமே பங்கெடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதன்படியே சில திருமணங்கள் நடந்து வருகின்றன.
நாகையில் ஒரு கல்யாணம் நடந்து அனைவரையும் அசரடித்து வருகிறது.. வேளாங்கண்ணியை சேர்ந்தவர் ஏழுமலை.. கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த சுகன்யா.. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. மணமக்கள் 2 பேருமே 3 அடி உயரம் உள்ளவர்கள்.
அண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு
வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் எளிய முறையில் இந்த கல்யாணம் நடைபெற்றது.. 50க்கும் குறைவான உறவினர்கள் இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.. மாப்பிள்ளையும், பொண்ணும் மாஸ்க் அணிந்திருந்தனர்.. கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறே மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
இந்த 3 அடி உயர தம்பதியின் திருமணம் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.. இதில் மாப்பிள்ளை ஏழுமலை தீவிரமான அஜித் ரசிகராம்.. அதனால் ஏராளமான அஜித் ரசிகர்கள் இந்த கல்யாண வீடியோவை ஷேர் செய்து, மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. மணமக்களை நாமும் மனசார வாழ்த்துவோம்!!