பிரசார கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி அசத்திய நாகை அதிமுக வேட்பாளர்.. திகைத்து போன அமைச்சர்
நாகை: பிரசாரக் கூட்டத்தில் 4 மொழிகளில் பேசி நாகை அதிமுக வேட்பாளர் சரவணன் இந்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பேசியதை கண்ட அமைச்சர் காமராஜ் ஆச்சரியமடைந்தார்.
தமிழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதில் நாகை மாவட்ட அதிமுக வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசி முடித்ததும் அதிமுக வேட்பாளர் சரவணன் பேசினார். அப்போது அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றது அங்கு தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பேன் என கூறினார்.
ரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி ஜெயிக்காது... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆருடம்
இதைத் தொடர்ந்து அவர் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம்ஆகிய 3 மொழிகளிலும் பேசி அசத்தினார். இதை பார்த்த அமைச்சர் காமராஜே ஷாக்காகிவிட்டார் என்று கூறுகிறார்கள்.