குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி
நாகப்பட்டினம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகப்பட்டினத்தில் நேற்று பிரமாண்ட அனைத்து கட்சி பேரணி நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு தினமான நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன.
நாகப்பட்டினம் தலைமை தபால் நிலைத்தில் நேற்று மாலை 4 மணிக்கு குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பேரணி தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இப்பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் மிக நீண்ட தேசிய கொடியை பதாகை போல் பிடித்தபடி ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.. இதில் நாகப்பட்டினம் இமாம் நிஜமுதீன், எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, நாகை எம்.பி. எம். செல்வராஜ்,. கீழ்வேளூர் எம்.எல்.ஏ. மதிவாணன், மற்றும் அ.மு.மு.க , வி.சி.க , சிஎபிம், மக்கள் நீதி மையம், எஸ்பிடிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.
மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்