பச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே!
பாரதியாருக்கு காவி நிற தலைப்பாகை குறித்து எல் கணேசன் கருத்து கூறியுள்ளார்.
நாகை: எச்.ராஜாவே பரவாயில்லையே போலிருக்கே.. பாரதியாரின் தலைப்பாகை ஓவியரின் கற்பனை என்றார். ஆனால் இல.கணேசனோ, பாரதியார் கோட் பச்சை கலரில் இருக்கிறதே.. அதை பத்தி ஏன் யாருமே கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நமக்கு வெள்ளை கலரிலேயே பார்த்து பழகிப்போன பாரதியாரின் தலைப்பாகை, காவி நிறமானதும் சர்ச்சையானது. இது எதேச்சையானது என்றது பள்ளிக்கல்விதுறை! இது ஒரு கற்பனை ஓவியம் என்றார் எச்.ராஜா!
ஆனால் பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய யெற்குழு உறுப்பினருமான இல கணேசன், காவி நிற தலைப்பாகைக்கு விளக்கம் சொல்லாமல், பாரதியின் கோட் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு இல கணேசன் சாமி கும்பிட வந்தார். பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:
"இப்ப இருக்கிற இளைஞர்களுக்கு தமிழே தெரியாத நிலை உள்ளது. இதில், கல்விக்கொள்கையில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை கூட புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. புதிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்பப் பாடமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
இதுவா அதுவா.. அவரா இவரா.. ஒரே குழப்பமா இருக்கேப்பா.. திமுகவுக்கு புது சவால்!
பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருக்கிறதா சொன்னவங்க.. அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி ஏன் யாருமே இதுவரைக்கும் கேள்வி எழுப்பவில்லை" என்று கூறினார்.
பாரதியாருக்கு பச்சை கலர் கோட் போட்டிருப்பதை இல கணேசன் வலிந்து சொல்ல காரணம் தெரியவில்லை. அதே சமயத்தில் பச்சை கலரை குறிப்பிட்டு சொல்லும் இல கணேசனுக்கு ஏன் வெள்ளை கலர் தெரியாமல் போனதும் என்றும் தெரியவில்லை!
ஆக மொத்தத்தில் ஆளாளுக்கு பாரதியாருக்கும் இப்போது கலர் பூச ஆரம்பித்து விட்டனர்.
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஒரு குட்டி.. இது பாரதியார் பாடிய பாடல்தான்.. கலர் பூசி அவரை களங்கப்படுத்தாம.. அவரை அவர் பாட்டுக்கு இருக்க விடுங்கப்பா.. நல்லதாப் போச்சு.