கோடியக்கரை சரணாலயத்தில் இறந்த விலங்குகள்.. தொற்றுநோய் பரவும் அபாயம்
கோடியக்கரை: கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் விலங்குகள், பறவைகள் இறந்து கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கோடியக்கரையில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம் உள்ளது. கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் அவசர அவசரமாக கோடியக்கரை சரணாயலம் மூடப்பட்டது. இந்நிலையில் அங்கு மழை, வெள்ளத்தால் விலங்குகள், பறவைகள் பலியாகிவிட்டன.
விலங்கு, பறவைகளின் உடல்களை அப்புறப்படுத்தாததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில் இறந்த விலங்குகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விலங்குகளையும் பறவைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments
English summary
Death animals and birds in Kodiakkarai birds sanctuary because of Gaja. Till now the bodies of them are not disposed as a result there will be chance to spread diseases.
Story first published: Sunday, November 18, 2018, 17:42 [IST]