நாகை அருகே போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்.. 12 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்
நாகைப்பட்டினம்: குத்தாலத்தில், மாற்றுமுறை மருத்துவம் என்ற பெயரில் 12 வருடங்களாக நடத்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் மாற்றுமுறை மருத்துவம் என்ற பெயரில், 12 ஆண்டுகளாக பல்கலைக்கழகம் நடத்தி வந்தார் செல்வராஜ். இது போலி பல்கலைக்கழகம் என்று காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் சென்றனர்.
மேலும், இவர் 1000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிரடியாக போலி பல்கலைகழகத்திற்கு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
செல்வராஜ் அறையில் நடந்த சோதனையில், ஏராளமான போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோதனை பற்றி தெரியவந்ததும், செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். எனவே, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments
English summary
Fake university has been sealed in Nagapattinam district in Tamilnadu.
Story first published: Thursday, January 10, 2019, 18:55 [IST]