நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்ந்தால் அது "சிம்பு"வுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி!

Google Oneindia Tamil News

Recommended Video

    இரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ

    வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இரு குழந்தைகளின் தந்தையான கல்லூரி விரிவுரையாளர், மாணவி ஒருவரை அழைத்து சென்றுவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பவர் சிலம்பரசன். இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர். ஏற்கெனவே கணவனை இழந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    [13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அவமானத்தில் கபடி பயிற்சியாளர் தற்கொலை!]

    தலைமறைவாகிவிட்டனர்

    தலைமறைவாகிவிட்டனர்

    இந்நிலையில் கல்லூரி மாணவியுடன் சிலம்பரசன் நெருங்கி பழகி வந்தார். இந்த விவகாரம் எப்படியோ கல்லூரியில் கசிய இருவரும் வேறு எங்கோ சென்று தலைமறைவாகிவிட்டனர். இந்த தகவல் அனிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    சமாதானப்படுத்தி

    சமாதானப்படுத்தி

    இதையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி வந்தால் உங்களுக்கு தகவல் கொடுக்கிறோம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வாழ்ந்தால் அவருடன்தான்

    வாழ்ந்தால் அவருடன்தான்

    இதையடுத்து போலீஸார் சிலம்பரசனையும் அனிதாவையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் இருவரும் திருவிடைமருதூரில் இருப்பது அனிதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று மகளை அழைத்தபோது தனக்கு சிலம்புதான் முக்கியம், வாழ்ந்தால் அவர் கூட வாழ்வேன்.

    துரோகம்

    துரோகம்

    உங்களுடன் வரமாட்டேன் என கூறிவிட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் விரிவுரையாளரின் மனைவிக்கு தெரியவர அவரும் சிலம்பரசனிடம் வந்து தன்னுடன் வந்துவிடுமாறு கதறினார். எனினும் இருவருமே எங்களை வாழ விடுங்கள். பிரித்து விடாதீர் என்று விடாபிடியாக உள்ளனர். இதனால் கண்ணீருடன் அனிதாவின் பெற்றோரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனக்கு துரோகம் இழைத்து விட்டாரே என சிலம்பரசனின் மனைவியும் கண்ணீருடன் சென்றுவிட்டனர்.

    English summary
    Lecturer fall in love with student near Vedaranyam. He was already married and having 2 children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X