உச்சி வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்த மின் ஊழியர்கள்.. கை குலுக்கி பாராட்டிய கமல்
மின் ஊழியர்களுக்கு கமல் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
Recommended Video
நாகை: உச்சி வெயில் மண்டை பிளக்க நின்றுகொண்டிருந்த இபி ஊழியர்கள் கமலின் இந்த ஜில் பாராட்டை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான்!!
கமல் இன்று இரண்டாம் கட்டமாக புயல்பாதித்த பகுதிகளை பார்வையிட துவங்கி உள்ளார். அதன்படி அன்று காலையிலேயே நாகை மாவட்டத்துக்கு சென்றுவிட்டார்.
அங்கு ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களை குறைகளையும் கேட்டு வருகிறார். இதற்காக அரசு பஸ்சிலும் ஏறி இறங்கி குறிப்பிட்ட கிராமங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.
இபி ஊழியர்கள்
இப்படித்தான் தோப்புத்துறை என்ற இடத்தில் இபி பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாரும் மஞ்சள் கலர் ஹெல்மட், காக்கி யூனிமார்டுன் இருந்தார்கள். வெயிலில் நின்றுகொண்டும், கரண்ட் கம்பத்தின் அந்தரத்தில் தொங்கிக் கொண்டும் ஊழியர்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள்.
நம்மவர்
வேறு கிராமத்துக்கு பார்வையிட சென்று கொண்டிருந்த கமல், இவர்களை பார்த்ததும் வழியிலேயே நின்றுவிட்டார். பிறகு ஊழியர்களை நோக்கி சென்றார். நம்மளை நோக்கிதான் கமல் வருகிறார் என்று தெரிந்ததும் யாருக்கும் எதுவுமே ஒரு செகண்ட் புரியவில்லை.
கைகுலுக்கினார்
அவர்களிடம் சென்ற கமல், மின்ஊழியர்களை வெகுவாக பாராட்டினார். இவ்வளவு நாள் வெயில், மழை பாராமல் ராப்பகலாக வேலை செய்ததற்காக தனது நன்றியையும் தெரிவித்தார். பிறகு ஒவ்வொரு ஊழியரின் கையை பிடித்து குலுக்கி மனசார வாழ்த்து சொன்னார்.
திக்குமுக்காடி போயினர்
மண்டையை பிளக்கும் வெயிலில் வேலையில் மூழ்கி கிடந்த இபி ஊழியர்கள் கமலின் இப்படி ஒரு ஜில் பாராட்டினால் திக்குமுக்காடி போய்விட்டனர். அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த கமல், தொடர்ந்து தனது ஆய்வு பணியினை நோக்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.