நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்டிய தனிமை.. லாட்ஜில் ரூம் போட்ட எழிலரசி.. வீலென்று அலறிய குழந்தை.. அடுத்து நடந்த பயங்கரம்!

பெற்ற குழந்தையை அடித்து கொன்ற தாய் கைதானார்

Google Oneindia Tamil News

நாகை: தனிமையில் இருந்த எழிலரசி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து லாட்ஜில் ரூம் போட்டார்.. 2 பேரும் ஜாலியாக இருந்தபோது, எழிலரசியின் குழந்தை வீல் என்று அலறியது.. அதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் ராமதாஸ்... 30 வயதாகிறது.. அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்க்கிறார். இவர் கடந்த 10-ந் தேதி ஒரு பெண்ணை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்து லாட்ஜில் ரூம் போட்டார்.

mother arrested for her three year old baby beaten and killed near Kanniyakumari

அந்த பெண் ஏற்கனவே கல்யாணமானவர் போல தெரிகிறது.. கையில் 3 வயது குழந்தையும் உள்ளது.. அந்த குழந்தையுடன் லாட்ஜ்-க்கு வந்தனர். பிறகு திடீரென குழந்தைக்கு உடம்பு சரியில்லை என கூறி 2 பேரும் அந்த குழந்தையை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர்.. டாக்டர்கள் செக் செய்து பார்த்துவிட்டு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

இதை கேட்டதும் கள்ள ஜோடி ஷாக் ஆகி, அந்த இறந்த குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து ஓடிவிட்டது.. இதனால் டாக்டர்கள் முதல் ஆஸ்பத்திரியில் இருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த இடமே பரபரப்பாகிவிட்டது.. உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லப்பட்டது.. அவர்களும் ராமதாஸையும் அந்த பெண்ணையும் தேடி வந்தனர்... அவர்கள் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில், வேளாங்கண்ணி ஆர்ச் பக்கம் 2 பேரும் நின்று கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவும், விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. வேளாங்கண்ணி ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போதுதான் அந்த பெண்ணின் பெயர் எழிலரசி என்று தெரியவந்தது.. பரமக்குடி பகுதியை சேர்ந்தவர்.. 28 வயசாகிறது.. கணவர் பெயர் மகேந்திரன். 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் மனுஸ்ரீ ஒரு மகளும் இருக்கிறார்கள்.. மகேந்திரன் சில வருஷத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. தனிமையில் இருந்த எழிலரசிக்கு, ராமதாஸ் போன் மூலம் அறிமுகமானாராம்.. பிறகுதான் கள்ளக்காதல் பற்றிக் கொண்டுள்ளது.

2 பேரும் ஜாலியாக இருக்க வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.. சம்பவத்தன்றும் இவர்கள் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். அப்போது குழந்தை மனுஸ்ரீ திடீரென லாட்ஜில் அவர்கள் உல்லாசமாக இருந்த போது குழந்தை மனுஸ்ரீ அழுதிருக்கிறாள்.. இதனால் ராமதாஸ் டென்ஷன் ஆகிவிட்டார்.. கோபத்தில் மனுஸ்ரீயை எட்டி உதைத்தாராம்.

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு : கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி - இடைத்தேர்தல் எப்போது காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு : கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி - இடைத்தேர்தல் எப்போது

அந்த குழந்தை அங்கேயே அப்போதே மயங்கி விழுந்துவிட்டது. பிறகுதான் ஆஸ்பத்திரிக்கு பயந்துபோய் தூக்கி வந்துள்ளனர்... குழந்தை இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொன்னதுமே இந்த ஜோடி பதட்டமாகிவிட்டது.. அதனால் குழந்தை சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு, நேராக லாட்ஜுக்கு வந்துள்ளது.. தங்கியிருந்த ரூமை அவசர அவசரமாக காலி செய்துவிட்டு, தப்பி ஓடி உள்ளது.

வேறு எங்காவது சென்று தலைமறைவாகி விடலாம் என்று முடிவெடுத்து ஊருக்கு கிளம்பி செல்ல தயாரானபோதுதான் போலீசில் வசமாக சிக்கி கொண்டது தெரியவந்துள்ளது. இந்த கள்ளக்காதல் ஜோடி கம்பி எண்ணி கொண்டிருக்கிறது.

English summary
Three year old baby killed by mother near Kanniyakumari
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X