ரூம் போட்டு.. கர்ப்பமாக்கி ஏமாற்றி.. வெட்டி விடுவேன் என மிரட்டல்.. எஸ்ஐ மீது பெண் பரபர புகார்
Recommended Video
நாகை: இளம்பெண்ணை ரூம் போட்டு.. கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.. இதை வெளியே சொன்னால் குடும்பத்தோடு வெட்டி சாய்த்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுபஸ்ரீ. தொண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கும், திட்டச்சேரி சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
தலைஞாயிறு பகுதியை இந்த இன்ஸ்பெக்டர், மணல்மேடு ஸ்டேஷனில் வேலைபார்க்கும்போது, சுபஸ்ரீயின் அறிமுகம் கிடைத்துள்ளது. இது ஒரு ஃபேஸ்புக் காதல்! ஒருத்தருக்கொருத்தர் நேரில் பார்த்து கொண்டனர்.. பலமுறை தனிமையில் ஜாலியாக இருந்துள்ளனர்.. விளைவு... சுபஸ்ரீ கர்ப்பம் ஆனார். இந்த விஷயத்தை விவேக் ரவிராஜிடம் சொல்ல, ஷாக் ஆகிவிட்டார் அவர்.
அபார்ஷன்
அதனால், "நாம கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஆனால் இப்போ இல்லை.. ஒரு வருஷம் ஆகட்டும்.. கல்யாணம் ஆகாமலேயே குழந்தை பிறந்துட்டா, உனக்கும் கெட்ட பேர், எனக்கும் அசிங்கம்.. அதனால இந்த கருவை கலைச்சிடு.. நாமதான் எப்பவோ ஒன்னாயிட்டோமே... நான் போய் உன்னை ஏமாத்துவேனா.. என்னை நம்பு" என்று பேசி சென்னைக்கு கூட்டி வந்து ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் சேர்த்து அபார்ஷனும் செய்துள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர்
அபார்ஷன் ஆனதுதான் தாமதம்.. அப்ப இருந்தே சுபஸ்ரீயிடம் சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதை தவிர்த்துள்ளார், சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ என்னை உடனே கல்யாணம் செய்துக்குங்க.. இல்லேன்னா எனக்கு சாகறது தவிர வேற வழி இல்லை" என்று அழுதுள்ளார். அதற்கு சப்இன்ஸ்பெக்டர், "நான் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கேன்... மக்களை பாதுகாக்கும் காவல்துறை அது... உன்னை கல்யாணம் செய்தால், என் கவுரவம் போயிடும்.. இந்த விஷயத்தை வெளியே சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்னே புதைச்சிடுவேன்.. கல்யாணம் செய்துக்கவே முடியாது.. என்ன பண்றியோ பண்ணிகோ" என்று சொல்லிவிட்டார்.
மிரட்டல்
இதெல்லாம் ஆடியோவாக வெளிவந்துள்ளது. அந்த பெண் கதறி அழுவதும், இன்ஸ்பெக்டர் கெட்ட கெட்ட வார்த்தைகளில் பெண்ணை மிரட்டுவதும் பதிவாகி உள்ளது. பீப் சத்தம் முழுசும் போடும் அளவுக்கு அந்த ஆடியோவில் பச்சை பச்சையாக பேசி இருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர்.
புகார்
கடைசியில் பாதிக்கப்பட்ட சுபஸ்ரீ, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ், சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போலீஸ்.. என புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒரு தமிழக அமைச்சரின் உறவுக்காரராம்.. அதனால் யாருமே தன் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வருகிறாராம். மேலும் புகார் தந்ததால் பெண்ணையும் மிரட்டி வருகிறாராம். இப்போது சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மீது சொல்லும் காரணம் என்ன தெரியுமா.."அவள் ஒரு நடத்தை கெட்டவள்" என்பதுதான்!