நாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடு
Recommended Video
நாகை: பொள்ளாச்சியை போன்று நாகப்பட்டினத்திலும் பல பெண்களை ஏமாற்றியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பேட்டை தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சுந்தர். கால் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆழியூர் தெற்கு தெருவில் உள்ள செல்போன் கடையில் 23 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த கடைக்கு அடிக்கடி சுந்தர் வந்துள்ளதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கிட்டதட்ட ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்தனர். சுந்தரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அந்த பெண் அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
பெண்ணுக்கு பெண்ணே பக்கா சப்போர்ட்.. ஆஹா.. சூப்பர்பா!
காரைக்கால் கோயில்
எனினும் சுந்தர் அந்த பெண்ணை விடாமல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி சுந்தர் அழைத்தபடி காரைக்கால் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு அறை எடுத்து இருவரும் தங்கினர்.
புகைப்படம்
பின்னர் சுந்தர் ஒரு குளிர்பானத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். இதில் அவர் மயங்கியவுடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து கொண்டுள்ளார்.
ஆபாச படம்
பின்னர் மயக்கம் தெளிந்து தனக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது ஏன் என கேட்டு அந்த பெண் கத்தியுள்ளார். உடனே சுந்தர் தன்னிடம் இருந்த அந்த பெண்ணின் ஆபாசமான போட்டோக்களை காட்டி மிரட்டியுள்ளார்.
புகார்
இதையடுத்து அவ்வப்போது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களை காட்டி அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளார் சுந்தர். இவரது டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து அந்த பெண் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.