தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமா?.. ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.. அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு
நாகை: திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்ததும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடுக்கம் தொடங்கிவிட்டதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்ததும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடுக்கம் தொடங்கிவிட்டதாகவும். அதனால் தான் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்கிறார் என கூறினார்.
முன்னதாக, தோல்வி பயத்தில் தான் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்கான மறைமுகமாக முயற்சிப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
அதே போல, இடைத் தேர்தலை கண்டு ஸ்டாலின் தயங்குவதாகவும், திருவாரூர் இடைத்தேர்தலை முதலில் எதிர்பார்க்க வேண்டிய கட்சி திமுக-வாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமமுக வெற்றி பெறும் என்ற பயத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின், முரணான தகவலை தெரிவித்து வருவதாக டிடிவி தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.