சசிகலாவை சாக்கடை என விமர்சித்த குருமூர்த்தி.... அமைச்சர் ஓஎஸ்.மணியன் பதில் கூற மறுப்பு
நாகப்பட்டினம்: சசிகலாவை கடுமையாக விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதிலளிக்க மறுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
நாகப்பட்டினத்தில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் அதிமுக கொடியை ஏற்றி, எம்ஜிஆரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.எஸ். மணியன். அப்போது, மழையால் பாதித்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக தமிழக அரசு சார்பாக கடந்த 7-ந் தேதி முதல் 600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது என்றார்.
மேலும், தற்போது மழை பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஓஎஸ்.மணியன் கூறினார்.
சீனாவின் உகான் லேப்ல இருந்துதான்...கொரோனா வைரஸ் பரவியது...ஆதாரங்களை முன்வைக்கும் அமெரிக்கா!
தொடர்ந்து சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஓஎஸ்.மணியன் பதில் கூற மறுப்பு தெரிவித்து, சில வினாடிகள் மெளனமாக இருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.