"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்!
நாகர்கோயில்: "கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே... என் கணவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்தது.. அதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்து துன்புறுத்துகிறார்... வேறு ஒரு பெண்ணை திருமணமும் செய்துள்ளார்.. நடவடிக்கை தேவை" என்று அதிமுக பிரமுகர் மீது இளம்பெண் ஒருவர் நாகை எஸ்பி ஆபீஸில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நளினகுமாரி.. 36 வயதாகிறது.. இவரது கணவர் ஷாஜின் காந்தி... காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர்.
ஷாஜின், சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது... இந்நிலையில் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் நளினகுமாரி நாகர்கோயில் எஸ்பி ஆபீசில் புகார் ஒன்றினை தந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் சொல்லும்போது, "2012-ல் ஷாஜினை சந்தித்தேன்.. அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. காதலாக மாறியது.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, டைவர்ஸ் ஆன விஷயத்தை அவரிடம் சொன்னேன்.. அதற்கு பரவாயில்லை என்று சொல்லி, முறைப்படி வந்து பெண் கேட்டார்.. இந்துவான நான் கிறிஸ்டியன் மதம் மாற வேண்டும் என சொன்னார்கள்.. அதன்படி கிறிஸ்தவ மதம் மாறினேன்.. ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எடுத்து ஆனி லதா என மாற்றிக்கொண்டேன். இரு வீட்டிலும் 16.9.2013-ல் எங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.
ரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற... கல்லால் அடித்தே கொன்ற கணவன்!
கல்யாணம் ஆன அன்றைய தினம் இரவு அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. ஒரு பெண் அனுப்பியிருந்தார்.. அதனால் வேறு ஒரு பெண்ணுடன் ஷாஜிக்கு உறவு இருப்பதை அறிந்து கொண்டேன். மறுநாள் இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்தார்.. 2017-ல் நடந்த சண்டையின்போதுகூட என்னை இரும்புக் கம்பியால் அடித்து என் கை எலும்பு உடைந்துவிட்டது.
கேரளா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இந்த சமயத்தில், சென்ற வருடம் ஜனவரியில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் புகார் தந்துள்ளேன்" என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஷாஜின் மறுத்துள்ளாராம்.. தன் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார் என்றும் சட்டப்படி அதை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறாராம்.