அரபிக் கடலில் மாயமான குமரி மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு
Recommended Video
நாகர்கோவில்: புயல் எச்சரிக்கை தகவல் தெரியாமல் அரபி கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான குமரி மாவட்ட மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
கடலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கை 78 லிருந்து 93 ஆக உயர்ந்து உள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் அதிர்ச்சி தகவலை அரசுக்கு தெரிவித்து உள்ளனர். ஓக்கி புயலில் புயலில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர்களை மீட்பதில் இருந்தது போலவே இப்போதும் மெத்தனம் காட்டப்படுவதாக மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துரை வள்ளவிளை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் அதிக நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 30 நாட்களுக்கு மேல் இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடந்த 7 நாட்களுக்கு முன் கோவா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரபிக்கடலில் கியார் புயல் உருவாகி இதுதொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உண்மையான பேய் யார் தெரியுமா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி!
இதையடுத்து அரபி கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த ஏராளமான விசைப்படகு மீனவர்கள் குஜராத், மும்பை, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ளனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை தகவல் தெரியாமல் அரபி கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான 6 படகுகளும் 78 மீனவர்களும் கடலில் மாயமான நிலையில் உள்ளனர்.
கடலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கை 78 லிருந்து 93 ஆக உயர்ந்து உள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.