நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடன் தொல்லை.. மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை.. நாகர்கோவிலில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஒரே குடும்பத்தில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன் (43). மர கடைசல் (கார்பெண்டர்) தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (37).

Carpenter kills his wife, 2 children and committed suicide in Nagercoil

இவர்களுக்கு அனுஷ்கா (10) என்ற பெண் குழந்தையும் விகாஸ் (4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் விகாசுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் பெருமளவு பணம் மருத்துவத்திற்காக செலவழிந்து கண்ணன் கடனாளி ஆனதாக கூறப்படுகிறது.

Carpenter kills his wife, 2 children and committed suicide in Nagercoil

இந்நிலையில் தொடர்ந்து மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த கண்ணன் தனது மனைவி சரஸ்வதி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனுக்காக 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Carpenter kills his wife and his 2 kids and he himself commited suicide in Nagercoil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X