நாகர்கோவிலில் திடீரென களமிறங்கி.. வேகவேகமாக நடந்த அமித் ஷா.. ஆச்சர்யப்பட்ட பொன்னார்.. செம ஹாப்பி
நாகர்கோவில்: உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நாகர்கோவிலில் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்.. இவரை காண மக்கள் பலர் கூடி வருகிறார்கள்.
அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் பாஜக தற்போது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்களும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பாக கன்னியாகுமரி வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் நிறுத்தப்பட உள்ளார். காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவை தொடர்ந்து இங்கு இடைதேர்தல் நடக்க உள்ளது.
குவாட் ஒத்துழைப்பு, மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு.. ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க உள்துறை செயலர்
தமிழகம் வந்தார்
இதில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். இதை முன்னிட்டு இன்று உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தமிழகம் வந்தார் . நாகர்கோவிலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காகவும், கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்வதற்காகவும் இவர் தமிழகம் வந்தார். இவரை வரவேற்பதற்காக நாகர்கோவிலில் பாஜக சார்பாக பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கேரளா
நேற்று கேரளாவில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்தார். ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்த அமித் ஷா இன்று சுசிந்திரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். சுசிந்திரம் பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அமித்ஷா வழிபாடு செய்தார்.
நடந்தார்
இதையடுத்து காலை 11 மணிக்கு அமித் ஷா பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். பாஜக சார்பாக லோக்சபா இடைத்தேர்தலில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார். எதை பற்றியும் யோசிக்காமல் தாணுமாலயன் கோவிலுக்கு அருகில் இருந்த தெருக்களில் சென்று அமித் ஷா அதிரடியாக வீடு வீடாக வாக்கு கேட்டார்.
வீடு வீடாக
சாலையில் இறங்கி வேகமாக அருகில் இருந்த வீடுகளுக்கு அமித் ஷா சென்றார்... பொன்னார் ஜிக்கு வாக்கு அளியுங்கள் என்று வாக்கு சேகரித்தார். அடுத்தடுத்த வீடுகளுக்கு நடந்து சென்றார்.இவருடன் பாஜக உறுப்பினர்கள் அணிவகுத்து வரிசையாக சென்றனர்.
திட்டம்
இங்கு எப்படியாவது வெற்றிபெற்று மீண்டும் தமிழகத்தில் இருந்து பாஜக எம்பியை பெறும் திட்டத்தில் அமித் ஷா இருக்கிறார். இதை முன்னிட்டுத்தான் இன்று நேரடியாக அமித் ஷா நாகர்கோவிலுக்கு வந்தார். அமித் ஷாவின் வருகையும், வீடு வீடான பிரச்சாரமும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு உற்சாகத்தையும், தேர்தல் மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது என்கிறார்கள்.