நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாழடைந்த பங்களாவில்.. சொந்த பேத்தியையே.. அசிங்கம் பிடித்த தாத்தா.. 10 வருஷம் ஜெயில்!

பேத்தியை நாசம் செய்த தாத்தாவுக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: 8 வயசு சொந்த பேத்தியையே பாழடைந்த பங்களாவுக்கு அழைத்து சென்று நாசம் செய்த தாத்தா இருதயதாசனை 10 வருஷம் ஜெயிலில் தூக்கி போட்டுவிட்டது மகிளா கோர்ட்!

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் ஹார்பர் ரோட்டை சேர்ந்தவர் இருதய தாசன். இவர்தான் அந்த தாத்தா.. 58 வயசு மீனவர்!

Court punished 10 years jail to Grand father in rape case

இவருக்கு 8 வயசில் ஒரு பேத்தி இருக்கிறாள் அதாவது மகன் வயிற்று மகள். இந்த பேத்தி உட்பட 3 குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள மணக்குடி கிராமத்தில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றுள்ளார். 3 குழந்தைகளும் அங்குள்ள பீச் மணலில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது பேத்தியை மட்டும், மறைவாக இருந்த பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்த விஷயத்தை சிறுமி பெற்றோரிடம் கதறி கொண்டே சொல்லவும், பெற்றோரும் பதறியவாறே கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

"நான் ஒரு சைக்கோ".. திரும்ப திரும்ப சொல்லும் கார்த்திகேயன்.. சிபிசிஐடியிடம் உண்மையை கக்குவாரா?

போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருதயதாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் 2016, ஜனவரி 2-ம் தேதி நடந்தது. எனினும் வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தாத்தா இருதய தாசனுக்கு 10 வருஷ ஜெயிலும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் ஆர் டி. சந்தோசம் உத்தரவிட்டார். ஒருவேளை 50 ஆயிரத்தை கட்ட தவறினால் மேலும் 2 வருஷம் ஜெயில் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

English summary
Kanniyakumari court punished 10 years Jail to 58 year old grand father for raped 8 year old grand daughter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X