1.14 கோடி வட நாட்டவர் குவிந்துள்ளனர்.. ஏன் எதற்காக.. கவுதமன் ஆவேசம்
Recommended Video
நாகர்கோவில்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்றே கால் கோடி வட நாட்டவர் வந்து குவிந்துள்ளனர் என்று இயக்குநர் கெளதமன் கூறியுள்ளார்.
தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் கன்னியாகுமரி அருகே சுவாமிதோப்பிறகு வருகை தந்தார். அங்கு நடந்த சான்றோர் சங்கமம் என்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கவுதமன் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடியே 14 லட்சம் வட நாட்டவர்கள் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். இந்தி தெரிந்தால் வேலை வாய்ப்பு உறுதி என்றால் இவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும்? இவை எல்லாம் தமிழனை சிறுபான்மை ஆக்கும் மத்திய ஆட்சியாளர்களின் திட்டம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது தமிழகத்தின் பேரழிவிற்கான துவக்கம். தமிழகத்தில் பதாகைகள் கலாச்சாரத்தில் எத்தனை விபத்து ஏற்பட்டாலும் இன்னும் திருந்தவில்லை. இவ்வளவு தூரம் நடந்தும் இது ஒரு விபத்து போன்றதுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது அநாகரீகமானது. பொறுப்பில்லாத பேச்சு.
இதே போன்று விபத்தில் சிக்கிய சுபஸ்ரீயை மருத்துவமனை கொண்டு செல்வதில் ஏற்பட்ட காலதாமத்தை பார்க்கும் போது மக்களாட்சி நடக்கிறதா? என்ற சந்தேகத்தையும் செயலற்ற நிர்வாகத்தையும் காட்டுகிறது என்று கூறினார்.