'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா
Recommended Video
நாகர்கோவில்: அரசியல் களத்தில் நேர்மையாக இருக்கும் என்னை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
கன்னியாக்குமரி மக்களவை தேர்தலில் கடந்த முறை அதிமுக, காங்கிரஸ், திமுக, பாஜக, இடதுசாரிகள் என தனித்தனியா களம் கண்ட நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்த முறை இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, கூட்டணியாகவும், அதிமுக பாஜக ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
வேலூரில் செலவு செய்த பணம் வீண்.. தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா? சீமான் கிடுக்குப்பிடி!
கடும் போட்டி
திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹெச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே யார் வெல்வது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
வாக்களித்த காங்.வேட்பாளர்
இந்நிலையில், இன்று நடந்து வரும் தேர்தலில் கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை குமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வாக்குப்பதிவு செய்தார்.
வசந்தகுமார் நம்பிக்கை
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் களத்தில் உண்மையுடனும், நேர்மையுடனும் இருக்கும் தனக்கு அனைத்து மக்களும் ஆதரவு அளிப்பார் என்றும், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மக்கள் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிகமாக ஆதரவு அளித்து வருவதாகவும் வசந்தகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர்
இதனிடையே கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.