புனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்!
Recommended Video
நாகர்கோவில்: புனித வெள்ளியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது சாலையோரம் வழங்கப்பட்ட கஞ்சியை வாங்கிக் குடித்தார் பெரும் கோடீஸ்வரரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான எச். வசந்தகுமார்.
நாகர்கோவிலில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆதரவற்றோர், ஏழைகள், பாதசாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே அவ்வழியாக சென்ற கோடீஸ்வரரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் காரில் இருந்து இறங்கி வந்து ஏழை மக்களோடு மக்களாக சரிசமமாக நின்று கொண்டு கஞ்சி அருந்தினார்.
இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் திருநாள் நாளை உலகம் முழுவதும் உள்ள கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் திருநாளுக்கு முன் வரும் வெள்ளி கிழமை புனித வெள்ளியாகவும், சிலுவை பாடு நாளாகவும் கிருஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
570 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்.. இவர்களில் எத்தனை பேர் எம்பியாகப் போறாங்களோ!
இந்த நாளில் அன்னதானம், ஏழை எளியோருக்கு உதவி செய்தல் போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் படி கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அன்னதானம் கஞ்சி தர்மம் போன்றன நடைபெற்றன.
நாகர்கோவிலில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆதரவற்றோர், ஏழைகள் பாதசாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே அவ்வழியாக சென்ற கோடீஸ்வரரான சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தனது காரில் இருந்து இறங்கி வந்து ஏழை மக்களோடு சரிசமமாக நின்று கொண்டு கஞ்சி அருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.
கஞ்சி குடித்த வசந்தகுமாருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். வசந்தகுமாரும் கஞ்சியைக் குடித்தடியே செல்பி கொடுத்து அசத்தினார்.