குமரி மாவட்டத்தில் கனமழை.. தண்டவாளத்தில் தண்ணீர்.. ரயில் சேவை பாதிப்பு!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்து வந்த கன பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உள்ளார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளோடு, கோழிபோர்விளை ஆகிய இடங்களில் தலா 85 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் அருகே புத்தேரி குளம் நிரம்பி உடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேஸஞ்சர் ரயில் ஆளூர் அருகே தண்டவாளத்தில் தண்ணீர் ஏறியதால் ஒழுகினசேரி அருகே நடுவழியில் ரயில் நிறுத்தம் இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரியில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு மழை தீவீரமடைந்து உள்ளது. நாகர்கோவில், பூதப்பாண்டி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து உள்ளது.
நாகர்கோவில் அருகே மிகப்பெரிய பாசன குளமான புத்திரி குளம் நீர் நிரம்பி அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது ரயில்வே தண்டவாளத்திலும் தண்ணீர் புகுந்ததால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயில் அளூரில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த குளத்தின் மடைகளை அரசு மேம்பாலம் பணிக்காக முடியாதல் தண்ணீர் குளத்தில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏறபட்டு உள்ளதாக இப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.