நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவல் நிலையம் முன்பு திடீர் பதட்டம்.. தீக்குளிக்க முயன்ற இலங்கை வாலிபர்

Google Oneindia Tamil News

Recommended Video

    காவல் நிலையம் முன்பு திடீர் பதட்டம்.. தீக்குளிக்க முயன்ற இலங்கை வாலிபர்-வீடியோ

    நாகர்கோவில்: இலங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இலங்கையை சேர்ந்தவர் ஜோயி ( வயது 30 ) இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் வந்துள்ளார். நாகர்கோவில் உள்பட பல இடங்களில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது இவருக்கு வேலை இல்லாமல்இருப்பதாக கூறப்படுகிறது.

    lankan youth attempts for suicide

    இந்நிலையில் நேற்று இவர் கன்னியாகுமரி காவல் நிலையம் சென்று அங்குள்ள போலீசாரிடம் தன்னை கைது ஜெயிலில் அடைக்கும் படி கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அங்கிருந்து அனுப்பி விட்டனர். இன்று அவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது அவரை போலீசார் அங்கிருந்து விசாரித்து அனுப்பி உள்ளனர்.

    பின்னர் திடீரென்று கோட்டார் காவல் நிலையம் வந்து தன்னை கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே போலீசார் அவரை அங்கிருந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் ஆனால் ஜோயி மண்ணெண்ணெய் வாங்கி வந்து உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள் இதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    English summary
    A Sri Lankan youth attempted for suicide infront of police station in Nagercoil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X