இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்திதான்- ஸ்டாலின் தடாலடி
நாகர்கோவில்: இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தடாலடியாக அறிவித்தார்.
நாகர்கோவிலில் திமுக- காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான். இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்தான். கருணாநிதியின் மகனாக ராகுலை வரவேற்கிறேன்.
உண்மையே எப்போதும் வெல்லும்.. அது மோடியை சிறைக்கு தள்ளும்.. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!
வளர்ச்சி இல்லை
ராகுலை பிரதமர் வேட்பாளராக துணிச்சலோடு நான் அறிவித்தேன். ஒளிமயமான இந்தியாவை தர வேண்டும். நாட்டிலும் அனைத்து துறைகளிலும் தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சி வளர்ச்சி இல்லை.
தொப்பி
கண்கட்டி வித்தைக்காரர் போல் மோடி செயல்படுகிறார். கருப்பு பணத்தை கேட்டால் நல்ல பணத்தை ஒழித்துக் கட்டினார். விருப்பமான உடைகளையும் தொப்பிகளையும் அணிந்து கொண்டு நாடு நாடாக செல்கிறார்.
கருப்பு பணம்
பிரதமர் மோடி ஒளிர்ந்து கொண்டு இருக்கிறாரே தவிர இந்தியா ஒளிரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அடிக்கல் நாட்டு விழாவை மட்டுமே நடத்தி வருகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் கொடுப்பேன் என்றார் மோடி.
40 தொகுதிகளை வென்ற கூட்டணி
ஆனால் ரூ 15 லட்சம் அல்ல, அட 15,000 ரூபாயும் அல்ல. வெறும் 15 ரூபாய் கூட இதுவரை யார் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படவில்லை. 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 40 தொகுதிகளை வென்ற கூட்டணிதான் இந்த மேடையில் உள்ளது.
இரும்பு மனிதரல்ல
ஏழைகள் சிரித்திட இறைவனை காண்போம் என அண்ணா கூறினார். அதற்கேற்ப உங்கள் (ராகுல்) ஆட்சி மூலம் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் கிடைத்திட வேண்டும். உங்களை ஆதரிக்க காரணம் நீங்கள் மோடி அல்ல. ராகுல் என்பதால்தான். பிரதமர் நரேந்திர மோடி இரும்பு மனிதரல்ல. அடிக்கல் நாட்டு மனிதர் பிரதமர் மோடி.
5-ஆவது ஆண்டில்
30 நாட்களில் 155 அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் அடிக்கல் நாட்டு விழாக்களையும் 5-ஆவது ஆண்டில் திறப்பு விழாக்களையும் நடத்த வேண்டும். ஆனால் மோடியோ வெறும் அடிக்கல் நாட்டுவதையே செய்து வருகிறார்.
வேறு தலைவர்கள் பெயர்
தங்கள் கட்சியில் உள்ள யார் பெயரையும் கூறி வாக்குக் கேட்கும் நிலையில் பாஜக இல்லை. வேறு தலைவர்களின் பெயரை கூறியே வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது என்றார் அவர்.