நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகனை தாக்கிய செல்வத்துக்கு ஜாமீன்

எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய நபருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்

    நாகர்கோவில்: மாவு புளிச்சு போச்சு.. நல்லா இல்லை.. என்று எழுத்தாளர் ஜெயமோகன் தூக்கி எறிந்த சம்பவம்.. போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி வரை சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் கடைக்காரர் செல்வத்துக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.

    கடந்த 14 - ந்தேதி மாவு வாங்க போன எழுத்தாளர் ஜெயமோகன், அது புளிச்ச வாடைவந்ததால், கடைக்கார பெண்ணிடமே திருப்பி தந்ததாகவும், அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில் அங்கு வந்த கடைக்கார பெண்ணின் கணவன் செல்வம், ஜெயமோகனை தாக்கியதுடன், அவரது வீடு வரைக்கும் விஷயத்தை கொண்டு போய்விட்டார் என்றும் சொல்லப்பட்டது.

    Nagarcoil Court granted bail to Selvam who attacked Writer Jayamohan

    இதன்பிறகு, செல்வம் தரப்பில் ஜெயமோகன்தான் தாக்கினார் என்றும், செல்வம்தான் தாக்கினார் என்று ஜெயமோகன் தரப்பிலும் சொல்லப்பட்டது. மேலும் விவகாரம் பெரிதாக காரணம், கடைக்காரர் செல்வம் திமுக பிரமுகர் என்ற தகவலும் கசிந்தது. இதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார் ஜெயமோகன்.

    இதையடுத்து, ஏஎஸ்பி. ஜவஹர் உத்தரவின்படி செல்வம் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கோரி நாகர்கோவில் கோர்ட்டில் செல்வம் மனு செய்திருந்தார். அதை நேற்று விசாரித்த கோர்ட் செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    அதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை அதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை

    இதனிடையே, ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கடைக்காரப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுவதுடன், வியாபாரிகள் சங்கத்தினரும் இதில் தலையிட்டு வருகின்றனர். எனவே, ஜெயமோகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி கடைக்கார குடும்பத்தினரும், வியாபாரி சங்கங்களும் கோர்ட்டை நாட இருப்பதாக தெரிகிறது.

    English summary
    Nagarcoil Court has granted bail to the Shop owner Selvam who attacked writer Jayamohan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X