திருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்!
நாகர்கோவில்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 18 பேருக்கு சிறை தண்டனையும் 6 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதி தமது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட முதல் 8 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக அறிவித்தார். அடுத்த 10 பேருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 6 பேருக்கு ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Comments
English summary
Nagarcoil court today pronounced the sentences in 8 Kg Golden Jewels stolen from Thiruvattar Temple Case.