நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசியின் பகீர் பக்கம்.. மகள்களை சீரழித்து.. வீடியோ காட்டி அவர்களின் அம்மாக்களையும் வீழ்த்தி.. ஷாக்!

நாகர்கோயில் காசியிடம் 3வது நாள் விசாரணை நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: காம கொடூரன் காசி செய்த வேலையை பார்த்தீங்களா.. மகள்களை ஏமாற்றி சீரழித்த பிறகு, அந்த ஆபாச வீடியோக்களை காட்டியே அவர்களின் அம்மாவையும் மிரட்டி ஏமாற்றி பணிய வைத்திருக்கிறாராம்!!
போலீஸ் காவலில் உள்ள 26 வயது நாகர்கோவில் காசி பற்றின தகவல்கள் தினந்தோறும் பரபரப்பாக வெளிவந்தபடியே உள்ளது.. நூற்றுக்கும் அதிகமான பெண்களை ஏமாற்றி, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

Recommended Video

    மகள்களின் வீடியோ காட்டி அவர்களின் அம்மாவையும் சீரழித்த காசி
     nagercoil kasi exploit women police case investigation

    சிறுமி முதல் குடும்ப பெண்கள் வரை யாரையுமே காசி விட்டு வைக்கவில்லை.. போலீசார் கைப்பற்றியுள்ள காசியின் லேப்டாப்கள்தான் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.. அதில் ஏகப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளன.

    அந்த பெண்கள் யார் யார், என மாவட்ட, மாநில வாரியாக லிஸ்ட் எடுத்து வருகின்றனர். அவர்களை சீரழிப்பது காசியின் வேலை என்றால், ஆபாச வீடியோவை சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்வது அவரது 2 நண்பர்களின் வேலையாம்! ஒருவர் கைதாகி உள்ளார், இன்னொருவர் ஷார்ஜாவில் வேலை பார்த்து வருகிறாராம்.. அவரை கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு காசி பெண்களை மிரட்டுவது போன்ற சில ஆடியோக்கள் வெளியானது.. பிறகு இளம்பெண்ணின் மடியில் பத்து கொண்டு, போலீஸ் அதிகாரியின் தொப்பியை அணிந்தபடி எடுத்து கொண்ட செல்பி வைரலானது.. இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.

    உல்லாசத்துக்கு அழைத்து.. கும்பலாக வீடு புகுந்து.. 16 வயது சிறுமியை.. தீக்குளித்ததால் பரபரப்புஉல்லாசத்துக்கு அழைத்து.. கும்பலாக வீடு புகுந்து.. 16 வயது சிறுமியை.. தீக்குளித்ததால் பரபரப்பு

    இதில், சில பெண்கள் போதையில் உள்ளனராம்.. அவர்களுக்கு சுயநினைவே இல்லாதபோதுதான் காசியின் லீலைகள் ஆரம்பமாகி உள்ளது.. சிறுமி, இளம்பெண்கள், மாணவிகள், கல்யாணம் ஆன பெண்கள் என அனைத்து தரப்புமே உள்ளனர்.. இதில் மகள்களை நாசம் செய்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.

    குடும்ப பெண்களும் உண்டு என்று நேற்று தகவல் வெளிவந்த நிலையில், அப்பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவிகளின் அம்மாக்கள் என்று பின்னர்தான் தெரியவந்துள்ளது. ஆனால் சில வீடியோக்களில் பெண்களே வலிய போய் காசியுடன் விருப்பப்பட்டு பேசுவதுபோல காட்சிகளும் உள்ளதாம்.. இவர்கள் காசியின் சுயரூபம் தெரிந்து பேசினார்களா, அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொண்டனரா என்ற உண்மை தெரியவில்லை.

    இது எல்லாவற்றையும்விட இன்னொரு ஷாக், காசி ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்துள்ளார்.. அந்த குரூப் அட்மின்கள் குமரி மாவட்ட போலீஸ், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் எல்லாரும்தான்.. முழுக்க முழுக்க விஐபிக்கள் மட்டுமே இருக்ககுகூடிய குரூப் அது.. அதில்தான் காசியும் இணைந்திருக்கிறார்... அதில் இருந்த பணக்கார வீட்டு பெண்களுக்கு வலையை விரித்து கவிழ்த்துள்ளார்.

    ஆனால் இவர்கள் எல்லாம் யார் யார், என்ன தொடர்பு, என்ற விரிவான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். இப்படி தினந்தோறும் காசி பற்றின தகவல்கள் கசிந்தபடியே இருந்தாலும், உண்மைதன்மை என்ன என்பதை நம் போலீசார்தான் சொல்ல வேண்டும்.. அதனால்தான் விசாரணையில் கிடுக்கிப்பிடியை விடாமல் தொடர்ந்தபடி உள்ளனர்.

    English summary
    nagercoil kasi exploit women police case investigation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X